சனி, 6 அக்டோபர், 2012

ஜன்னல்




ஜன்னல் வழிஅவளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்குள் ஒரு வக்கிரப் புத்திஎன்னை விட இரண்டு அல்லது மூன்று வயது அவளுக்கு அதிகமாக இருந்த போதும்அவளுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் புத்திக்கு இல்லைஒருவேளை நான் அவளைப் பற்றி கேள்வி பட்ட விஷயங்கள் அதற்குக்  காரணமாக இருக்கலாம்அல்லது என் வயது காரணமாக இருக்கலாம்


 
எது எப்படியோ ஒரு இருபத்திமூன்று வயது இளைஞனின் பருவ இச்சை காரணமாகபலமுறை அவள் குளிக்கச் செல்லும் அழகினைவீடு பெருக்கும் அழகினைபாத்திரம் கழுவும் அழகினை மறைந்திருந்துக்  கண்டிருக்கிறேன்
பார்க்க அழகாகத்தான்  இருந்தாள்கொஞ்சம் கலர் தான்கருப்பு இல்லைநீண்ட நெடிய கனத்த தேகம்பிட்டம் தொட்டு நிற்கும் கருத்த தலைமுடிசிரிக்கையில் வலிந்து தெரியும் கன்னக்குழிகள்.  நெஞ்சுக் கூட்டுக்குள் அடைந்திருக்கும் முயல் முகங்கள்எந்நேரமும் வெளியே குதிக்கலாமென்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் துள்ளல் நடை.  உடல்உடை ஏனைய பாவனைகளில் நடிகை சரிதாவை ஞாபகப் படுத்தினாள்

அத்தனை அழகான முட்டை கண்கள்கண்ணுக்கு மையிட்டு கூர்மை செய்திருந்தாள்

அவளோடு பேசிப் பார்த்ததில்லைஎன் பக்கமிருந்து வெறும் ஏக்கப் பார்வைகள் மட்டும்அங்கிருந்து ஏதும் இல்லை.

  

அவள் குளிக்கச் செல்லும் போதும்குனித்து நிமிர்ந்து பெருக்கும் போதும் என் மனமெங்கும் குப்பைஎதேச்சையாக கண்களில் அவள் தட்டுப்படும்போது மட்டும்பார்த்து ரசித்த நான்இப்போது அவள் வருகைக்காகக் காத்திருக்கவும் தொடங்கினேன்என் வீட்டு மாடியின் பின்புறத்தில் அவள் வீடும் இருந்தது எனக்கு மிகவும் வசதிமகிழ்ச்சியும் கூட.

 

பார்த்தவுடன் பரவசப்படுத்தும் பேரழகியாய் இல்லா விட்டாலும்எங்கள் ஊரில் பலபேர் அவளைப் பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்காமத்தைத் தவிர்த்து அவளைப் பார்கையில் அவள் நிலை சற்று பரிதாபத்திற்கு உரியதுதான்ஏதோ ஒரு பண்ணையாரின் கள்ள உறவிற்கு பிறந்தவளாம்அவள் அம்மா உயர் குடியில் பிறந்தவராம்ஆனால் ஒரு பண்ணையாரின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி சின்ன வீடாகி சிரழிந்தவராம்அம்மா சிரழிந்ததற்கு அடையாளமாய் ஒரு மகள்தன் வாழ்க்கை தன் மகளுக்கு வரக் கூடாதென்றுஒரு வரன் பார்த்து மகளுக்கு மணம் முடித்து வைத்துள்ளாள்.

 

நல்ல உறவில் பிறந்தப் பெண்ணிற்கே நல்ல மாப்பிளை கிடைப்பது கஷ்டம்இப்படி கள்ள உறவில் பிறந்தப் பெண்ணுக்கா மாப்பிளை கிட்டும்.  இருந்தும் படாத பாடுபட்டு ஒரு மாப்பிளையைக் கண்டு பிடித்துவிட்டாள்எங்கள் ஊர்தான்கொஞ்சம் வயசாளிஎங்கள் ஊர் பள்ளியின் கணக்கர் ராஜரெத்தினம்கால் கொஞ்சம் ஊனம்.  கொஞ்சம் ஆஸ்த்மா நோயாளி வேறுஅந்தப் பெண்ணுக்கு அந்த கல்யாணத்தில் மன மகிழ்ச்சியே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

 

நாற்பத்தெட்டு வயது புது மாப்பிளையை யாருக்குத்தான் பிடிக்கும்முகத்தில் சலனம் ஏதும் இல்லாமல், அழகாக அலங்காரம் செய்துஅசையாமல் நிற்கும் ஜவுளி கடை பொம்மை போல மணவறையில் இருந்தாள் அந்தப்பெண்.  ரெம்ப குஷியோடு ராஜரெத்தினம் தாலி கட்டினார்.  கிழவனின் முகம் அலங்கார பூச்சுகளால் பளபளத்தாலும்சுருக்கு விழுந்த தோல்கை நடுக்கம் ஆகியவை உண்மை வயதைக் காட்டிக் கொடுக்கவே செய்தது.  தேய்த்து கழுவிவைத்த செப்புப்பாத்திரமாய் இருந்தாலும்பழைய பாத்திரத்தில் புதுப்பொலிவு கிட்டுமோ?  தேய்ந்து மழுங்கிய கலப்பைநிலத்தை ஆழ்ந்து அரவணைத்து கீறுமோ?  எதைப்பற்றியும் யோசிக்காமல்அந்த இளந்தளிரை முதிர்க்கொடியோடு இணைத்துக் கட்டியது உலகு.

 

நேரடி சொந்தக்  காரனில் தொடங்கிதிருமணத்திற்கு வாழைக்  கட்ட வந்தவர்கள் வரைசாப்பாட்டுப் பந்தியில் உப்பு வைத்தவனில் தொடங்கிசாமியானா பந்தல் போட குழி தோண்டியவன் வரைராஜரெத்தினத்தை நினைத்து ஏக்கப் பெரு மூச்சு விட்டார்கள்இவர்களின் கல்யாணமான அன்று முதல்எங்கள் ஊரின் காம கண்கள்அந்த கிழத்தை நினைத்தே பொறாமை கொண்டன.

 

காத்திருந்து காத்திருந்து... கிழவன் நல்ல ஆளாத்தான்யா புடிச்சிருக்கான்... குட்டி சிக்குனுல்லா இருக்கா..."

 

 

"கால் கொஞ்சம் சரியில்லைன்னு இந்த ஊர்காரனுவே அவன படுத்தின பாடு... இப்ப பாரு... நொண்டி பயலுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைச்சி... அம்சமான கிளியும் கிடைச்சிருக்கு...”

 

 

"கிழட்டு கிளிக்குத்தான்பட்டு குஞ்சலம் வாய்க்கும்னு சும்மாவா சொன்னாங்ககிழவன் யோகக்காரன்தான்."

 

என்பது போன்ற உரையாடல்கள்.

 

எனக்கு பக்கத்துக்கு வீடு என்பதால் என்னிடமும் பலபேர் விசாரித்தார்கள்என்னிடம் ரெம்ப குறைச்சலாகப் பேசக் கூடிய பல பேர்கள் கூட இதன் பொருட்டுஎன்னிடம் "பெரிதாக"   விசாரித்தார்கள்... 

 

மக்கா... உன் வீட்டு பின்னாடி தானடே... நீ பார்த்து... பேச்சு குடுத்து வைடே... வசதிக்கு இல்லாடாலும்.. அசதிக்காவது ஒதுங்கிக்கிலாம்...” என்று நமட்டுச் சிரிப்புடன் ராமு அண்ணன்தான் முதல்ல ஆரம்பித்தான்.

 

அப்புறம் பார்த்தால்....

 

ராத்திரி எதாவது சத்தம் கேக்குமா டே... உன் வீட்டுக்கு கிட்ட தானடே... ஆள் எப்டின்னு நோட்டம் பாருடே....” என்றான் கொரட்டி கோவிந்தன்.

 

பகல் புல்லா மத்தவன்... அதான் அந்த ரத்தின கெழவன் ஸ்கூல்ல கணக்கு பாக்கான்... ராத்திரி கணக்க புல்லா மாப்பிளைதான் பாக்குறான்” என்று என்னை கேலி செய்தான் எடுபிடி மாமன்.

 

உன்ட நல்ல பேசுவாளாம்லா.... இளம் ப்ராயம்லா...  வந்த ரெண்டு மூணு நாள்லேயே பார்ட்டியை அமுக்கிட்டேயடே... என்னை பத்தி கொஞ்சம் சொல்லு பா...” என்றான் முட்டைகோஸ் ராமசந்திரன்.

 

இப்படி எல்லோரும் கேட்க கேட்க எனக்கும் ஒரு இனம் புரியாத ஆசைஅவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனிக்கத் தொடங்கிஇப்போது அவள் வரும்வரை காத்திருக்கவும் ஆரம்பித்தேன்என் வீட்டில் இருந்து பார்த்தால் அவள் வீட்டுப்  பின்புறம் தெரியும்.  நான் இருப்பது அவளுக்குத் தெரியாதவாறு ஜன்னல் அமைப்பு இருந்ததால் எனக்கு வசதியாய் இருந்ததுஎல்லோரும் சொல்லச் சொல்ல என் பார்வையின் வீரியமும் அதிகரித்ததுகண்கொத்திப் பாம்பாக அவள் அவயத்தின் நீள அகலங்களைக்  கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

 

 காமம் இனிது.  கண்முன் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கும் "காலம்கொடிது.  அவள் ஒரு பெண்னென்றோஅவளும் ஒரு உயிரென்றோ என்பதுமாதிரியான எந்த எண்ணமும் இல்லாமல் காமம் என்னை ஆட்டிப்படைத்தது.  ஆனால் அந்த வீட்டில் அடிக்கடிக் கேட்கும் அந்த கிழவரின் இருமல் ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லைஇது தவிர சராசரி வீடுகளில் கேட்கும் தண்ணீர் சிந்தும் ஒலி... பாத்திரங்கள் நகரும் ஒலி... துணி துவைக்கும் ஒலி... கதவு திறக்கும் ஒலி... வேறேதும் இல்லை.

 

அன்று ஒரு நாள்அந்த பெண்ணின் “சிரிப்பொலி”. பொல பொல பொல பொல பொலவென அழகான சிரிப்புமழை குறைவான சமயங்களில் அருவிகளிலிருந்து தண்ணீர் விழும் போது வரும் சப்தம் போல்கருங்கல் படிக்கட்டில் சில்லறைகளைச் சிதறவிடுவது போல்.  சிறுகுழந்தையின் அரையில் கட்டிய மணியெழுப்பும் ஒலியைப்போல்.  அம்மாதிரி... பொல பொல பொல பொலவென அழகாகச் சிரித்தாள்

 

முதன் முதலாய் காமம் விடுத்து அவள் சிரிப்பை ரசித்தேன்.  ஏதோ ஓன்று என்னை அவள் பக்கம் ஈர்த்ததால் ஜன்னல் வழி பார்க்கத் தொடங்கினேன்கிழவன் பள்ளிக்கூடம் போனதால் அவள் ஒரு பூனைக் குட்டியிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்பூனைக்குட்டியைத் தூக்கி பிடித்துஅதனை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்அது மெதுவாய்... அவள் முகத்தைகன்னத்தை நக்கியதுஅந்த மெல்லுணர்வில் கண்கள் சுருக்கிபூனைமுடிகள் மேலெழும்பிமுகமெங்கும் புல்லரிப்போடு சிரித்துக்கொண்டிருந்தாள்.  பூனை அவள் கைகளில் நெளிந்துகுழைந்து கொண்டிருந்தது.  அதன் பின்னங்கால்கள் இரண்டும் அவள் கனமான மார்புகளில் பதிந்திருந்ததுஇம்ம்...ம்..ம்.... யோகம் செய்த பூனை.  என் ஏக்கப் பெருமூச்சின் தாக்கம் சூரியனை ஒத்திருந்தது.

 

அதன் பின்பு பலமுறை அவள் சிரிப்பொலி கேட்கும்சிரிப்பொலி கேட்கும் போதெல்லாம் அவள் ஏதேனும் ஒரு விலங்கோடு விளையாடிக் கொண்டிருப்பாள்பூனைக்குட்டிஅணில்கோழிக்குஞ்சுகாகங்கள்கிளிகளென ஏதேனும் ஒன்றுடன் கொஞ்சிக் கொண்டிருப்பாள்.  அல்லது அவற்றிக்கு “சோறு” வைத்துக் கொண்டிருப்பாள்.  சில சமயம் நானும் ஒரு விலங்காக பிறந்திருக்க மாட்டேனா...? என்று ஏங்கியதுண்டு.  அவள் வீட்டு பின் முற்றத்தில் இருந்துதான் அவள் சாப்பிடுவாள்நானறிந்த வகையில்அவள் தனியாகச் சாப்பிட்டதில்லை

 

பூனையுடன் சேர்ந்து சாப்பிடுவாள்.

 

கோழிகளோடு சேர்ந்து சாப்பிடுவாள்.

 

அணிலுடன் சேர்த்து சாப்பிடுவாள்.

 

அவள் கையில் அமர்ந்து காகம் சாப்பிடுவதைக் கூடப் பார்த்திருக்கிறேன்அந்த பூனைகோழிகாகம்சாப்பிடுவதை விட இவள் குறைவாகத்தான் சாப்பிடுவாள்.


அந்த வீட்டில் சிரிப்பொலியும்விலங்குகளும் இல்லையெனில் அந்த கிழவர் இருக்கிறார் என்று அர்த்தம்நாளாக நாளாக ராஜரெத்தினத்தின் “ஆஸ்த்மா” நோய் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்ததுஇருமல் சப்தம் இப்போது அடிக்கடி கேக்கிறதுமூச்சு முட்டி ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.   அடிக்கடி அவர் இருமுவதும்அவள் அவர் நெஞ்சை தடவிவிட்டுமாத்திரை கொடுப்பதும் நடக்கும்ஒன்றிரண்டு வருடங்களாக கிழவரோடு அந்த பெண்ணும் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்இருந்தும் “ஆஸ்த்மா” கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஆயுளைக் குடித்துக் கொண்டிருந்தது.  

 

 யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில் மேலும் கீழுமாய் வேகமாய் மூச்சிழுக்க  முயன்றுமுடியாமல் "சிவபதம்பற்றினார் கிழவர்.   ஊர்க் கூடி கிழவனை வழியனுப்பி வைத்ததுநெறைய புது மனிதர்கள் சாவு வீட்டில் தென் பட்டார்கள்அவள் பெரிதாக அழவில்லைசோகத்துடனான கேள்விகளின் அறிகுறிகள் அவள் முகமெங்கும்.  ஐந்தாறு நாட்களில் ஏனைய உறவினர்களும் செல்லஎவர் அழைத்தும் போகாமல் வீட்டில் தனியாகவே இருந்தாள் அவள்.

 

ராஜரெத்தினம் பணியில் இருக்கும் போதே இறந்ததால்வேலை அவளுக்கு கிடைக்குமென்று பேசிக் கொண்டார்கள்கிடைத்துக் கொண்டிருக்கும் ஓய்வூதியத்தை கொண்டு அவள் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தாள்.  கிழவன் இறந்த நாளிலிருந்து அவள் மீது ஊரார் கண்கள் இன்னும் அதிகம் நிலைத்தன.  உறுமீனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்கைப் போல்கருவாட்டு பானைக்குள் தலையிடக் காத்திருக்கும்மதில் ஓட்டுப் பூனை போல்ஆடாதுஅசையாது அவளைப் பற்றிய நினைப்பிலிருந்தனர் ஊரார் பலர்.

 

இறந்த சில நாட்களுக்குஅவள் வீட்டில் எதுவும் இல்லாதது போல் இருந்தது.  ஜன்னலின் அருகில் பலமணிநேரம் காத்துக்கிடந்தும் பலனேதுமில்லைஇருமல் ஒலிசிரிப்பொலிஎதுவும் கேட்க வில்லைசில சமயங்களில் சில விலங்குகள் மட்டும் சப்தமிட்டுக் கொண்டிருந்தன.


 
 சில நாட்களில் அவள் சிரிப்பொலி மீண்டும்.  அதே விலங்குகளோடு மீண்டும் எப்போதும்போல் கொஞ்சிக் கூலாவிக் கொண்டிருந்தாள்தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருப்பாள் போலும்.  என் தின வேளைகளில் அவளைக் கவனிப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தேன்காமத்தோடுப் பார்க்க ஆரம்பித்த போதிலும்இப்போது அவள் சிரித்த முகத்தையும் ரசித்தேன்.

 

அன்று ஒரு வித்தியாசமான விலங்கொலி அவள் வீட்டில்...

 

வீல்...ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... என்று வந்த சத்தத்தில் விழித்துக்கொண்டேன்.

 

மணியைப் பார்த்தேன்அதிகாலை இரண்டு மணிஜன்னல்களைத்  திறந்து சப்தமின்றி அவளைக் கண்டேன்அவள் ஒரு நாய் குட்டி அருகில் உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்அவள் சேலை முந்தானையில் “அதிர்ஷ்டக்காரப் பூனை” தூங்கிக் கொண்டிருந்ததுஅந்த நாய் குட்டி பிறந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் இருக்கலாம்முகத்தில் வெள்ளையுள்ள செவலை நாய்க்குட்டிகண் விழிக்க வில்லைஅங்கும் இங்கும் உருண்டு கொண்டுநாக்கை வெளியில் துருத்தி கொண்டு... வீல்..ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... என்று கத்திக் கொண்டிருந்தது.

 


எங்கிருந்து இந்த நாய் குட்டியைப் பிடித்தாளோ
விவரம் கேட்டவள்...! மனுசனை உறங்க விடாமல்?  கொஞ்சம் திட்டிக் கொண்டேன்பக்கத்தில் சின்ன தட்டில் பால்சோறுஎல்லாம் வைத்திருந்தாள்நாய் குட்டி அத்தனையையும் தொட்டுப் பார்த்ததாக தெரியவில்லைஅது ஊஊஊஊஊஊ என்று கத்தியதுபின்பு ஓஓஓஓஓ என்று முனங்கியது.

 

தூக்க கலக்கத்தோடு இருந்த அவள் முகத்தில் ஏதோ ஒரு கலவரம்.  நாய் குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  நாய் குட்டி உருண்டதால் முந்தானை நழுவியதுநான் கண்களை விரித்துக் கவனிக்கத் தொடங்கினேன்.  நாய் குட்டி தன் சத்தத்தை நிறுத்தியதாக தெரிய வில்லைஅது மீண்டும் ஊளையிடத் தொடங்கியதுஊஊஊஊ...ஊஊஊஊவ்... நாக்கை வெளியே நீட்டிநீட்டிகத்தியது.  அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

 

இவளுக்கு வேறு வேலை இல்லைஎரிச்சல் பட்டுக் கொண்டேன்நாய்க்குட்டி சப்தமிட்டுக்கொண்டே இருந்தது.  கண்களை உறக்கம் தழுவியதால்உறங்கும் நோக்கோடு படுக்கையில் சாய்ந்தேன்.  நாய்க்குட்டியின் "ஊளைசப்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.  உறங்க முடியவில்லை.  எரிச்சலாக வந்தது.  தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன்.  ஐந்து பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்திடீரென்று நாய்க்குட்டியின் சப்தம் நின்றதுஇரவின் மௌனம் அவ்விடமெங்கும்.  ஒரு சிறு சத்தம் கூட இல்லைஒரு வேளை நாய்க்குட்டி இறந்திருக்குமோஆர்வம் தாங்காமல் எழுந்து ஜன்னல் வழிப் பார்த்தேன்.

 

அவ்வளவு தூக்கக் கலக்கத்திலும் என் கண்களிலிருந்து கண்ணீர்உணர்ச்சியோட்டதை என்னால் அடக்க முடியவில்லைஉடம்பிலும் ஒரு சிறு பதற்றம்அவள் தன் மார்பகத்தைத் திறந்து அந்த நாய் குட்டியின் வாயில் வைத்திருந்தாள்அதுவும் உடம்பெங்கும் உதறலோடு உறிஞ்சி...உறிஞ்சி... குடித்துக் கொண்டிருந்தது. துக்கம் தாளாத எனக்கு “ஒரு தாயிடம் ஒரு குழந்தை பால் குடிப்பதைப் போலிருந்தது". ஏனோ மேற்கொண்டு பார்க்க முடியாமல்சட்டென்று படுக்கையில் விழுந்த எனக்கு பல நிமிடங்கள் தூக்கம் வரவில்லைஅப்புறம் நானறியாத ஒரு வேளையில் தூங்கிப்  போனேன்.


விடியற்காலையில் எழுந்து மீண்டும் ஜன்னல் வழி அப்பெண்ணை கவனித்தேன்அவள் அந்த நாய் குட்டியோடும்பூனையோடும் சிரித்த முகத்தோடு விளையாடிக் கொண்டிருந்தாள்எனக்கு ஏனோ ஒரு தாய் அதன் குழந்தைகளோடு விளையாடுவது போலிருந்ததுஅன்று முதல் என் தாயின் “முகச்சாயலே” அப்பெண்ணிடமும் தென்பட்டது  

 

புதன், 3 அக்டோபர், 2012

மலையாள பேய்கள்

அன்று கல்லூரி வகுப்புகள் வேகமாக முடிந்து விட்டதால் சீக்கிரமாகவே வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன்.  விசுவாசமாக மரத்தடியில் தலைகுனிந்து ஒரு பக்கமாய் சாய்ந்திருந்த என் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கல்லூரி வாசலை கடந்து பிரதான சாலைக்கு வந்தேன்.
பயண தூரங்களை பிரதிபலிக்கும் பிரதான சாலைக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தது என் கல்லூரி. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் வழி எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதனை அழகானது.. மிகவும் ரம்மியமான பாதை அது.... சுற்றிலும் மலை சூழ ஒரு காட்டில் பயணிப்பது போல இருக்கும்.. இருட்டிய நேரத்தில் அந்த வழியாக செல்வது கொஞ்சம் கஷ்டம்தான்.. இருந்தாலும் இயற்கை மீது பற்று உள்ள யாரும் அந்த வழியை புறக்கணிக்க மாட்டார்கள்.. ஆரல்வாய்மொழியை கடந்த கொஞ்ச நேரத்தில் ஆள் சஞ்சாரமற்ற அந்த வழி ஆரம்பித்து விடும்.. நல்ல சாலை தான்.... எதிரே வாகனங்கள் ஏதும் வரும் வாய்ப்பு இல்லாததால் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கின்ற யாவரும் 60 கீ.மீ வேகத்துடனே செல்வார்கள்... எப்போதாவது எதிரே ஒரு பேருந்து வரும். வழி நெடுக மரங்கள், மின் கம்பங்கள்,மேய்ச்சலுக்கு பின் திரும்பும் மாடுகள் இவை மட்டுமே..
இவை தவிர தற்போது சில செங்கல் சூளைகளும் புதிதாக முளைத்திருந்தன. சில நேரங்களில் மாட்டு கூட்டங்கள் வந்து வழியை ஆக்ரமித்து கொள்ளும். சிறிது தூரம் பயணித்ததும் சற்று தொலைவில் மலை மனிதனுக்கு அரைஞான் கயிறு கட்டி விட்டது போல்  “பொய்கை” அணை அழகாக தெரியும். அதனை சுற்றி பச்சை பசேலென பட்டு துணி விரித்தது மாதிரி இருக்கும்.
முகத்தில் மோதும் குளிச்சியான காற்றை சுமந்தபடி பற்பல நினைவுகளோடு கொஞ்சம் வேகமே பயணித்து கொண்டிருந்தேன். காற்று தலை முடியை திக்குக்கொன்றாய் கலைத்தது.. காற்று மோதியதால் கண்களிலும் சிறிது கண்ணீர்..
சாலையின் ஒரு வளைவை திரும்பிய கணத்தில் ஒரு பாட்டி தலை நிறைய விறகை சுமந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். பாட்டிக்கு வழி விடுத்து நான் வண்டியை வேகப்படுத்தும் வேளையில் தான் கவனித்தேன், சாலை முழுவதும் பூக்கள்.. அழகான கிரேந்தி பூக்கள்... குவியல் குவியலாக ரோடு முழுவதும் ..வழி நெடுக போட்டிருந்தார்கள். காற்றில் அங்கும் இங்குமாய் அவை ஆடிக்கொண்டிருந்தன.  அத்தனையும் கிரேந்தி பூக்கள்... இடையிடையே சில ரோஜா பூக்களும்..
இந்த வழிகளில் ஏராளமான சுடுகாடுகளும், கல்லறை தோட்டகளும் இருப்பது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. ஒருவாறு ஊகித்து கொண்டேன். இது யாரோ ஒருவருடைய மரணத்திற்கு போடப்பட்ட பூக்கள்தான். கொஞ்சம் பயமாய் இருந்தது.. என்னதான் மனிதன் ஆட்டம் போட்டாலும் சாவை கண்டு பயப்படாதவன் இருக்க முடிமோ?? மரணம் என்ற ஓன்று மட்டும்தான் எத்தனை பெரிய மனிதர்களுக்கும் ஒரு முடிவை கொடுத்து விடுகிறது. சில நேரங்களில் சாலையோர சுடுகாடுகளில் பிணம் எரிந்து கொண்டிருக்கும். பிணம் எரியும் வாடை எனக்கு அறிமுகமானது இந்த  வழியாக பயணிக்கும் போது தான்.. அம்மாதிரியான பகுதிகளில் என் வண்டியின் வேகம் பல மடங்காக இருக்கும்.
செண்பகராமன்புதூரை தாண்டி, வண்டி ஔவையார் அம்மன் கோவில் சாலையில் திரும்பியது. மனதில் பயத்தோடு நானும் திரும்பும் வேளையில் என் வழிகளை கிரேந்தி பூக்களும் பின் தொடர்ந்தன.. யார் இறந்திருப்பார்கள்.?? எந்த ஊர்காரராக இருக்கும்?? ஆணா... இல்லை பெண்ணா???? எத்தனை வயது இருக்குமோ?? சின்ன வயசு கன்னி பெண்ணாக இருக்குமோ??? எனக்கு தெரிந்து, சின்ன வயதுகளில் மரணித்தவர்கள் அனைவரும் நினைவுக்கு வந்தார்கள்.... சில வயதானவர்களும்... எங்கள் ஊரில் தற்கொலை செய்து கொண்டவர்களும் என் வண்டியின் பின்னால் பறந்து வருவது போல் இருந்தது. நேரத்தை பார்த்தேன்... மணி ஆறு முப்பத்தியந்து.. சூரியன் மறைந்து வெளிச்சம் கொஞ்சமாய் குறைந்திருந்தது.. தூரத்தில் இருக்கும் கல் மண்டபங்கள் மேலும் என் பயத்தை கூட்டியது. இன்னும் கொஞ்சம் தூரந்தான்.. சீதப்பால் போய் விட்டால் பயம் இல்லை..
வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினேன்.. வேகமா செல்... வேகமா செல்... என்று யாரோ கூறினார்கள்.. வண்டியின் வேகத்தில் கிரேந்தி பூக்கள் எல்லாம் பதறி சிதறி வழி விட்டன..
சற்று தூரத்தில் வெள்ளை நிற பேருந்து ஓன்று சென்று கொண்டிருப்பது போல் தெரிந்தது.. அமரர் ஊர்தியாக இருக்கலாம்.. இறந்தவர் உடலை கொண்டு செல்லலாம்.. தன்னிச்சையாக வண்டியின் வேகம் குறைந்தது. நன்றாக உற்று பார்த்தேன்.. வண்டியை சுற்றி கூட்டம் ஏதும் இல்லையே??? இறந்தவர்களை கூட்டமாக சென்று வழியனுப்புவது தானே மரபு. வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினேன். வழியெங்கும் இப்போதும் கிரேந்தி பூக்கள் கிடந்து என் பயத்தை அதிகப்படுத்தியது..
சுமாரான ஒரு வேகத்தில் பேருந்தை நெருங்கிய பின்பு தான் தெரிந்தது அது ஒரு வேன் என்று.. வண்டியின் பின்புற வாசல் திறந்திருந்தது. அதன் வழியே ஒரு மூடையிலிருந்து கிரேந்தி பூக்கள் வழியெங்கும் சிந்தி கொண்டிருந்தது.. கேரளா வண்டியாக இருக்க வேண்டும். வண்டி எண் KL என்று ஆரம்பித்திருந்தது.. இந்த வழியில் தான் தோவாளையிலிருந்து கேரளாவிற்கு பூக்கள் கொண்டு செல்வார்கள்.. எனக்கு இப்போது தான் எல்லாம் புரிந்தது.. “மரண பயம்” விலகி வண்டியை விரட்டினேன்..
வேனை தாண்டி செல்லும் போது பூக்கள் சிந்துவதாக சைகை செய்து வண்டியை நிறுத்தினேன். வேன் ஓட்டுனர் மற்றும் கூட ஒரு ஆள் வண்டிக்குள் இருந்தனர். நான் கூறியதை கேட்டதும் ஒருவர் பதறி... உடனடியாக வண்டி நின்றது.  இருவரும் இறங்கி வந்து சாலையெங்கும் சிதறி கிடந்த பூக்களை கோபம் கொப்பளிக்க பார்த்தனர்.. வண்டி ஓட்டுனர் வயதானவராக தெரிந்தார்.. மற்றொருவர் இளம் பிராயமாக தெரிந்தார். அவர்களை பார்த்தவுடன் மலையாள மக்கள்  என்பது தெளிவாக தெரிந்தது.  இருவரும் நெற்றியில் குங்குமம் இட்டு கொண்டிருந்தனர். உடைகளிலும், உடல் அசைவுகளிலும் மலையாள நடிகர்களை ஞாபகப் படுத்தினர். அவர்கள் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது.. ஆர்வ மிகுதியில் நானும் வண்டியை நிறுத்தினேன்..

அருகாமையில் சென்று பார்த்த போதுதான் அவர்கள் இருவரும் அரை போதையில் இருப்பது தெரிந்தது.. தண்ணியடித்திருக்கிறார்கள்.. கோபமாக பேசிக்கொண்டே வண்டியின் பின்புறத்தில் மூடைகளை சரி செய்தனர்.. நானும் சற்று நேரம் நின்று வேடிக்கை பார்த்தேன்..
வேனை விட்டு இறங்கிய இருவரும் சிறிது நேரம் பூக்கள் சிந்தியதற்காக கவலை பட்டார்கள். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குறை கூறிக் கொண்டார்கள்.. அவர்கள் பேசுவது ஏதோ குத்துமதிப்பாக புரிந்தது..
எல்லாவற்றையும் சரி செய்து விட்டு “வழர நண்ணி சேட்டா”னு என்னை பார்த்து கூறினர்..
நானும் பல்லிளித்து கொண்டே  “ஈஈ புஷ்பமெல்லாம் எவ்ட போகுன்னு?? என்று அரைகுறை மலையாளத்தை அவிழ்த்து விட்டேன்..
“ சேட்டா இதுநெல்லாம் சபரி மலை சேத்ரம் போகுன்னு!!!” சொன்னான்.  இருவர் வாயிலிருந்தும் கெட்ட வாடை வீசியது..


 வாடையில் என் முகம் சுருக்குவதை கவனித்திருப்பார்கள் போலும்... இருவரும் சற்று தூரம் பின் சென்று விட்டனர். வாயை மூடிக்கொண்டே வயதானவர் கேட்டார்.. சாரே... இவடே இருன்ந்து நெடுமங்காடு எத்ர கிலோ மீட்டர்??? எம்பது எம்பதஞ்சு கிலோமீட்டர் இருக்கும்... நான் சொன்னேன்..  விடை பெற்று கொண்டு சென்று விட்டேன்.. என் வண்டியின் பின்னால் கேரள வேன் மெதுவாக வந்து கொண்டிருந்தது.. கிரேந்தி பூக்கள் சிந்தாத ரோட்டில் பய உணர்வின்றி வண்டியில் பயணித்தேன்.. வீடு சென்று சேரும்போது மணி ஏழு..
மறுநாள் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன்.. முந்தின நாள் சம்பவங்கள் மறந்து போன நிலையில், இன்று மீண்டும் பயணம்..
சீதப்பால் பாலத்தை தாண்டியதும் கொஞ்சம் கூட்டமாக இருந்தது.. தலை கீழாக குப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு வேன்.. எனக்கு மனசிலாயி விட்டது.. பூ கொண்டு சென்ற கேரளா வேன் தான்.. கடவுளே... தானாகவே உதடு சொன்ன வார்த்தை.. வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.. ஆர்வ மிகுதியில் அவரிடம் கேட்டேன்..
அண்ணே என்னாச்சு... ஆக்சிடேண்டா???
ஆமா போ... தண்ணியே போட்டிட்டு வண்டியே உருட்டுனா இப்படிதான் ஆகும்.. பலவரோளிக்கல்லேலுக்கு கொழுப்பு.. எங்கயோ பொறந்து இங்க வந்து செத்து கெடக்கு...
எப்போ னே நடந்தது...
சயங்காலம் ஏழு மணிக்காம்.... தோவாளைல பூ எடுத்திட்டு மருந்த போட்ட்ரிகானுவோ....மப்புல பூவை எல்லாம் சிந்திட்டே வந்திருக்கானுவ.... மாடு குறுக்கே வந்ததும்... ஆத்துக்குள்ள வண்டியை தலை குப்ரா கவித்திட்டான்.. வண்டி புள்ளா பூவா கெடக்கு.. பத்து..... இருவது..முப்பது ஆயிரத்துக்கு காணும்... எல்லாம் அங்கனயே கெடக்கு.. சாமிக்கு பூ வாங்க வந்தானுவளாம்... இப்ப எல்லாம் அவனுவ சாவுக்கே போட்ட மாறி கிடக்கு...
எனக்கு அடிவயிற்றில் இருந்து ஏதோ உருண்டு தொண்டைக்கு வந்தது...
பாடி எடுத்தாச்சா... னே.....
காலையில தான் ஆம்புலன்ஸ் வந்துச்சு... எடுத்து வெளிய போட்டாச்சு.... ஒரு பாடி தண்ணில நல்ல ஊரிட்டாம்.... இம்ம்.... வேற என்ன செய்ய.. விதி முடிஞ்சு போச்சி..... இப்படி போக ரெம்ப நேராகும்னு நேனைகேன்.... வண்டி இப்பெல்லாம் உட மாட்டனுவோ....  நீ வேணா இறச்சகுளம் சுத்தி போகப்புடதா??? என்று சொல்லும் போதே...என்னை தாண்டி ஒரு சில வண்டிகள் நகர ஆரம்பித்தது....
வண்டி விட்டிட்டானுவோ.... போப்...போ.... என்றார்...
நானும் வண்டியை நகர்த்தினேன்... இரண்டு சடலங்களையும் வெள்ளை நிற  துணியில் சுற்றி சாலையருகில் வைத்திருந்தனர்... குப்புற கிடந்த வண்டி எங்கும் கிரேந்தி பூக்கள்... கொஞ்சம் வாடி இருந்தது... உள்ளுக்குள் பயம் உறுத்த, ஒருவாறு சமாளித்துக்கொண்டு வண்டியை நகர்த்தினேன்.. மனமெங்கும் ஏதோ ஒரு கனம்... ஜன நெருக்கம் தீர்ந்து வண்டியை வேகப்படுத்தினேன்... மலையாள பேய்கள் என் மண்டையை வட்ட மிடுவது போல் இருந்தது....
சாரேரேரேரேரேரேரேரேரேரே... இவடே இருன்ந்துதுதுது நெடுமங்காடுடு எத்ர கிலோ மீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்??? என்று மானசீகமாய் ஒரு குரல் கேட்பது போல் இருந்தது...
பகலிலேயே எனக்கு பயமாய் இருந்தது.... என்னை அச்சுருத்தும் பல பேய்களுடன் மலையாள பேய்களும் சேர்ந்து விட்ட சந்தோஷத்தில்...... இல்லை............ “பயத்தில்” நான் வண்டியை விரட்டி கொண்டிருந்தேன்.... தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டு கொண்டிருந்தது....