வியாழன், 18 அக்டோபர், 2012

ஒரு வருட காதல்


சித்திரையில் என் நித்திரையை கலைத்து
வைகாசியில் உன் கண் ஆசி கிடைத்து
ஆடியில் உன்னிடம்  நாடி வந்து
ஆனியில் உன்னையே நாண வைத்து
ஆவணியில் உன்மேல் தாவணி போலாகி
புரட்டாசியில் உனக்கு  புகழாசி செய்து
ஐப்பசியில் உன்னிலே ஐக்கியமாகி
கார்த்திகையில் உந்தன் கீர்த்தியினை பெற்று
மார்கழியில் நீ வேறுகதி சேர்ந்த பின்பு
தையில் நம் காதல் பொய் என்றாகி
மாசியில் என்னை யோசிக்க வைத்து
பங்குனியில் என்னை பரதேசி ஆக்கிவிட்டாய் ..................

4 கருத்துகள்:

  1. இந்த காதலில் நாயகனை பரதேசி ஆக்காமல் வெற்றியில் முடித்திருக்கலாம்!!!


    அன்புடன்,
    சிவா.அ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது முதல் காதலின் புலம்பல் தம்பி.... இரண்டாவது காதல் .... வெற்றிதான்...

      நீக்கு

Thanks